திருச்சி: கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - உரிமையாளர் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே மேல்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிவிஎஸ் டோல்கேட் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பக்கத்தில் திடீரென புகை வந்தது. அதனைக்கண்ட, கார் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்திய நிலையில், தீ மளமளவென பரவியதால் கார் முற்றிலும் எரிந்தது. காரில் பயணித்த அனைவரும் கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். காரை வாங்கி 5 மாதங்களான நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உரிமையாளர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினார். 

Night
Day