திருப்பத்தூர்: பெண் தொழிலாளிக்கு ரூ.5.6 கோடி வரிபாக்கி இருப்பதாக நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெண் தொழிலாளிக்கு ஐந்தரை கோடி வரிபாக்கி இருப்பதாக வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுமனை கிராமத்தைச் சேர்ந்த பீடித் தொழிலாளியின் 22 வயது மகள் வான்மதிக்கு வணிவரித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், வணிகவரித் துறைக்குப் பாக்கி வைத்துள்ள 5 கோடியே 62 லட்சத்து 11 ஆயிரத்து 766 ரூபாய் ரொக்கப்பணத்தை 2 நாட்களில் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீசால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

varient
Night
Day