திருவள்ளூர்: சாலையில் சென்ற கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணலிபுதுநகர் பகுதியில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஹைதராபாத் சென்று கொண்டிருந்தது. அப்போது வேர்க்காடு பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் லாரியில் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனடியாக லாரியில் இருந்து குதித்த ஓட்டுநர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day