திருவள்ளூர்: சிகரெட் நெருப்பால் படுக்கையில் பற்றிய தீ - கதவை உடைத்து போதை நபர் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே சிகரெட் நெருப்பால் படுக்கையில் தீப்பற்றி வீடு முழுவதும் புகை சூழ்ந்தது. திருவள்ளூர் கிழக்கு குளக்கரை தெருவில் வசித்து வரும் சேகர், கதவை உள் தாழ்ப்பாளிட்டு மதுபோதையில் இருந்துள்ளார். தலைக்கேறிய போதையில் இருந்த சேகர் சிகரெட் துண்டை மெத்தையிலேயே போட்டுள்ளார். இதன் காரணமாக மெத்தையில் தீப்பற்றி வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதை கண்ட அக்கம்பக்கத்து விட்டார், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே போதையில் இருந்த சேகரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Night
Day