தூத்துக்குடி: கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இங்கு வருகை தந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை முத்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் குறித்து என்னென்ன ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது? என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கி கூறினர்.

Night
Day