புதுக்கோட்டை: மும்மதத்தினர் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருநல்லூரில் மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தாரை தப்பட்டைகளுடன் முகூர்த்தக்கால் எடுத்துவரப்பட்டு பூஜை செய்து, போட்டி நடைபெறும் இடத்தில் நடப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Night
Day