தூத்துக்குடி: திமுக கூட்டத்தில் போதையில் அலப்பறை செய்த திமுக குடிமகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசிக்கொண்டிருந்த போது, திமுகவை சேர்ந்த குடிமகன் ஒருவர் அங்கிருந்த ஸ்பீக்கர் பெட்டி டவரில் ஏறி அலப்பறை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது. விளாத்திகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி எம்பி பேச தொடங்கியவுடன் திமுக கரை வேஷ்டி கட்டிய குடிமகன் ஒருவர் திடீரென மேடைக்கு  எதிரில் இருந்த ஸ்பீக்கர் பெட்டி டவரின் மீது ஏறி போதையில் அலப்பறை செய்தார். இதனால் பதற்றமான போலீசாரும், திமுகவினரும் அவரை கிழே இறக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கீழே இறங்காமல் உளரத்தொடங்கினார். இதையடுத்து ஸ்பீக்கர் பெட்டியின் மீது ஏறி போலீசார் அந்த நபரை கீழே இறக்கினர். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களிடம் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

varient
Night
Day