நகர்கோவில்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவில் அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செண்பகராமன் புதூரில் கிராம மக்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. தட்டு வண்டி, வில்லு வண்டி, சிறிய தட்டு வண்டி என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் இருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

Night
Day