பெரம்பலூர்: அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய பாஜக மாவட்ட தலைவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் அருகே அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வி.களத்தூர் அருகே மறவநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆர்.சி. பள்ளி வளாகத்தையொட்டி பாஜக சார்பில் கொடி கம்பம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, ஆர்.சி. பள்ளியின் நிர்வாகி அகஸ்டின் என்பவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உரிய அனுமதியின்றி நடப்பட்டிருந்த பாஜக கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர். இதையடுத்து, பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மணிகண்டன், சுரேஷ், வெங்கடேசன் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Night
Day