பெரம்பலூர்: பெற்றோர் கண்டித்ததால் காதலர்கள் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்த யுகேஷ் என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியான மணியரசி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்ததையடுத்து இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். 

Night
Day