விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வரும் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும் என்றும், மனுக்களை வாபஸ் பெற 26ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Night
Day