ரஞ்சி கோப்பை 7 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்குள் நுழைந்த தமிழக அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஞ்சி கோப்பை போட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கோவையில் நடைபெற்ற சவுராஷ்டிரா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணியின் 5 விக்கெட்டுகளை சாய்த்த கேப்டன் சாய் கிஷோர் சாய்த்த நிலையில், அந்த அணி 183 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய தமிழக அணி 338 ரன்கள் குவித்தது. பாபா இந்திரஜித் 80 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில், பேட்டிங்கிலும் அதிரடி காட்டிய சாய் கிஷோர் 60 ரன்கள் குவித்தார். அடுத்து 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி 122 ரன்களில் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சிலும் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியதில் தமிழக அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 

Night
Day