உத்தரப்பிரதேசம் : காணாமல்போன சாமியார் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் காணாமல்போன சாமியார் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு சணல் பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தோய் மாவட்டம் கிர்தர்பூர் கிராமத்தை சேர்ந்த சாமியார் மஹந்த் மணிராம் தாஸ் என்பவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சீதாபூரில் தனது வருடாந்திர யாத்திரையை மேற்கொண்டபோது திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து, மஹந்தின் மருமகன் தைராம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சாமியாரை தேடி வந்தனர். இந்நிலையில், சித்தாலி சாலையில் உள்ள புதரில் மஹந்த் மணிராம் தாஸ் துண்டுதுண்டாக வெட்டிகொலை செய்யப்பட்டு, சணல் பையில் அவரது உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day