க்ரைம்
கஞ்சா போதையில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
ஏற்காடு அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்காடு 40 அடி பாலத்திற்கு அருகே உள்ள மலைப்பாதையின் தடுப்பைத் தாண்டி சூட்கேஸ் ஒன்று கிடந்ததைப் பார்த்த வனத்துறையினர், இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார், உடலை வீசிச்சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...