குஜராத்: மாடல் அழகி தற்கொலை - சன் ரைசர்ஸ் ஐதராபாத் வீரருக்கு போலீஸ் சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்தில் மாடல் அழகி தானியா சிங் தற்கொலை வழக்கில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சூரத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை அன்று தானியா சிங் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு இறுதியாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன் ஆன அபிஷேக் சர்மாவை தொடர்பு கொண்டதால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் சர்மாவுக்கும், தானியா சிங்கிற்கும் இடையே என்ன தொடர்பு என விசாரித்தால், அவரது தற்கொலைக்கான விடை கிடைக்கும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

Night
Day