சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் போக்சோவில் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒசூர் அருகே தனியார் காப்பகத்தில் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தனியார் காப்பகம் ஒன்று கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் நெல்லையைச் சேர்ந்த சாம் கணேஷ் என்பவர் தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர், காப்பகத்தில் படித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தாளாளர் சாம் கணேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. மேலும், சாம் கணேஷைக்கு உதவியாக இருந்த ஒசூரைச் சேர்ந்த நாதா முரளி, செல்வராஜ் மற்றும் தாளாளர் மனைவி ஜோஸ்பின், ஆசிரியை இந்திரா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Night
Day