க்ரைம்
திமுக எம்எல்ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தேனி அல்லிநகரம் நகராட்சியில், திமுக நகர்மன்ற தலைவரின் கணவர், பொது மக்களிடம் வாங்கிய லஞ்ச பணத்தை, அரசு அதிகாரிகள் மூலம் திருப்பி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 33 வார்டுகளை கொண்ட தேனி அல்லிநகரம் நகராட்சியில், திமுகவை சேர்ந்த ரேணுபிரியா தலைவராக இருந்து வருகிறார். இவரது கணவர் பால முருகன், கட்டண கழிப்பிடத்திற்கு 5 லட்ச ரூபாய் சந்தை ஏலம் எடுக்க 10 லட்ச ரூபாய், பூக்கடைக்கு 10 லட்ச ரூபாய், தெரு நாய்கள் கருத்தடை செய்வதற்கு லஞ்சம் என பல லட்சம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் 16 பேர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொதுமக்களிடம் பெற்ற லஞ்ச பணம் அனைத்தும், நகராட்சி அலுவலர்கள் மூலம், திமுகவை சேர்ந்த நகர்மன்ற தலைவர் ரேணுபிரியாவின் கணவர் பாலமுருகன் திருப்பி வழங்கியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...