நியோ மேக்ஸ் வழக்கு - 15 மாதங்களில் முடிக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியோ மேக்ஸ்  நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் விதமாக செய்தித்தாள்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் விளம்பரம் கொடுக்கப்பட்டதில் இருந்து 8 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன்  புகார் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். மேலும், நிதி நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து அவற்றை மொத்தமாக வழக்கில் இணைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இணைக்கப்பட்ட சொத்துக்களை உரிய சட்ட விதிகளை பின்பற்றி சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று விற்பனை செய்யவும் அதில் கிடைத்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

varient
Night
Day