பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புளியந்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியக்கூடிய பெண் காவலர் செல்வி, புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த காவலர் செல்வி, இன்று பணிக்கு வராததால் சக போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார் குடியிருப்புக்கு சென்று பூட்டியிருந்த கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் புளியந்தோப்பு காவலர்கள் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது செல்வி தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து கிடந்துள்ளார். 

Night
Day