கள்ளக்குறிச்சி: நேரடி நெல் கொள்முதல் மையங்களை உடனடியாக திறக்க கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர், கணையார் கிராம நேரடி நெல் கொள்முதல் மையங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடை பணிகள் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாகியும் 2 நெல் கொள்முதல் மையங்களும் திறக்கப்படாததால் சுமார் 300 டன் நெல்மணிகள் தேங்கி உள்ளது. களத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல் மணிகளை அங்கிருக்கும் வனப்பகுதியில் இருந்து மயில் காட்டுப்பன்றி மான் உள்ளிட்டவை சேதப்படுத்துவதாகவும், கடுமையாக உழைத்து அறுவடை செய்த நெல் மணிகளை பாதுகாக்க முடியவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். 

varient
Night
Day