திருப்பூர்: சாலையில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் கடித்து 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வட்டாரம், கழுகரை, போத்தநாயக்கனூர், சால்ரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான வெறி நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி துரத்தி கடித்து வருகின்றன. இந்நிலையில், தெருநாய்கள் கடித்து காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day