நாமக்கல்: நிற்காமல் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பொதுமக்களை ஏற்றாமல், அவ்வழியாக உள்ள பாலம் வழியாக செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பேருந்து ஒன்றை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day