மயிலாடுதுறை: குவைத்தில் உள்ள கணவரை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத் நாட்டுக்கு வேலைக்காக சென்ற கணவரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறி பெண் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இலுப்பூர் கிராமத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவர் தனியார் ஏஜென்சி மூலம், குவைத் நாட்டில் உள்ள அரேபியர் வீட்டுக்கு, ஓட்டுநராக பணிபுரிய கடந்த டிசம்பர் மாதம் சென்றார். இதனையடுத்து தனது மனைவிக்கு போன் செய்த, அவர், இங்குள்ள அரேபியர் வீட்டில் தான் மிகவும் கொடுமை அனுபவித்து வருவதாக குமுறியுள்ளார். பின்னர், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, அப்துல் ஜாபர் தனது மனைவிக்கு தொடர்ப்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மனைவி, கணவனை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

varient
Night
Day