விசாகா மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதி அமைந்துள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. 

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையத்தில் உள்ள விசாகா மகளி விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேரில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சங்கீதா, விடுதியின் கீழ் செயல்பட்ட விசாகா மருத்துவமனையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில், முறையான பதிவு சான்றிதழ் பெறாமல் மருத்துவமனை உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா ஆகியோர், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், எலக்ட்ரோபதி மருத்துவம் படித்த தினகரன் என்பவரை வைத்து அலோபதி மருத்துவம் பார்த்தது அம்பலமானது. இதையடுத்து விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளர் புஷ்பா மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி மருத்துவர் தினகரனை கைது செய்தனர். இதனிடையே, விசாகா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிய அதிகாரிகள், கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடங்கினர். 

Night
Day