டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் தொடரில் 20 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 92 ஆண்டு கால இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் ஒரே இன்னிங்ஸில் 10 சிக்சர்களை அடித்ததில்லை. இதன் மூலம் சவுரவ் கங்குலிக்கு பின் ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களை விளாசிய 2-வது இந்திய இடதுகை பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கங்குலி 534 ரன்களை விளாசினார். அந்த சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் எளிதாக முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. 

Night
Day