சென்னை: சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்த கஞ்சா போதை இளைஞர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பாடியில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சாலையோர கடையில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்து, வியாபாரி மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பாடி குமரன் நகர் பட்டேல் தெருவில் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து வருபவர் சிவகுமார்.  இவரது கடைக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள், பிரிஞ்சி சாதம் மற்றும் சிக்கன் பக்கோடா வாங்கிவிட்டு, பணம் தர மறுத்துள்ளனர். இதனால் வியாபாரி சிவகுமார், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், கடையை அடித்து நொறுக்கி கட்டையால் வியாபாரியை தாக்கியுள்ளனர்.

Night
Day