முன்னாள் எஸ்.ஐ. கொலை - உதவி ஆணையர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை டவுன் பகுதியில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை  செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் நிலத்தகராறில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில் முக்கிய நபராக கருதப்படும் கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தௌஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே ஜாகிர் உசேன் புகார் மீது நடவடிக்கை எடுக்காத டவுன் காவல்நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காததால் நெல்லை டவுன் உதவி ஆணையர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை தலைமை இயக்குநருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையின் பேரில் காவல் உதவி ஆணையர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Night
Day