வேலூர்: தணிகை மலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் அணைக்கட்டு தணிகை மலையில் பற்றி எரிந்த காட்டுத் தீயால் ஏராளமான மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. அணைக்கட்டு அருகே உள்ள தணிகை மலையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த மலையை சுற்றிலும் இயற்கையான மரங்களும் மூலிகை செடிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் கஞ்சா போதையில் சில நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும், தீவைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Night
Day